உயிர் வருக்கம், ஔவையார் ஆத்திச்சூடி

ஆத்திச்சூடி – Aathichudi – உயிர் வருக்கம்

About Aathichudi:  http://en.wikipedia.org/wiki/Aathichoodi

Author: ஔவையார்

கடவுள் வாழ்த்து

பாடல்:

 “ஆத்தி சூடி யமர்ந்த தேவனை

 ஏத்தி ஏத்தி தொழுவோம் யாமே!!”

ஆத்தி சூடி – திருவாத்தி மலர்மாலையை அணிந்த
யமர்ந்த – சிவபெருமானால் விரும்பப்பட்ட ( மேல் அமர்ந்த )
தேவனை– ஆனைமுகக் கடவுளை
ஏத்தி ஏத்தி – பலகாலும் (மேலும் மேலும்)
தொழுவோம் யாமே – நாம் வணக்கம் செய்வோம்

பொருள்:

 திருவாத்தி மலர்மாலையை அணிந்த சிவபெருமானால் விரும்பப்பட்ட ஆனைமுகக் கடவுளை நாம் பலகாலும் வணக்கம் செய்வோம்!!

உயிர் வருக்கம்

1)   அறஞ்செய விரும்பு

(அறம் – தருமம்)

தருமம் செய்ய நீ விரும்புவாயாக!!

2)   ஆறுவது சினம்

(சினம் -கோபம்; ஆறுவது- தணிவது)

கோபம் தணிந்து விடக்கூடிய தன்மையுடையது!!

3)   இயல்வது கரவேல்

(இயல்வது- இயன்ற; கரவேல்-தருமத்தை செய்யாமல் இரூத்தல் கூடாது)

செய்வதற்கு இயன்ற தருமத்தை செய்யாமல் இருத்தல் கூடாது!!

4)   ஈவது விலக்கேல்

(ஈவது- கொடுப்பதை; விலக்கேல்-தடுக்காதே)

ஒருவர் மற்றவருக்குக் கொடுப்பதைத் தடுக்காதே !!

5)   உடையது விளம்பேல்

(உடையது- உன்னிடம் உள்ளதை; விளம்பேல்- கூறாதே)

உனக்குள்ள பொருள் மற்றும் சிறப்புகளை பலரும் அறியும்படி கூறாதே ( பெருமையாக பேசாதே) !!

6)  ஊக்கமது கைவிடேல்

(ஊக்கமது – உள்ளக் கிளர்ச்சியை; கைவிடேல் – தளர்ந்து போக விடாதே)

ஒரு காரியத்தை செய்தக்கண் உண்டாகிய உள்ளக் கிளர்ச்சியை தளர்ந்து போக விடாதே!!

7)   எண்ணெழுத் திகழேல்

(எண் – கணிதம்; எழுத்து- இலக்கண நூல்; இகழேல் – இகழ்ந்து ஓதுக்கி விடாதே)

கணித நூல் ,இலக்கண நூல் முதலியவைகளை இகழ்ந்து ஓதுக்கி விடாமல் கற்க வேண்டும்.

8)   ஏற்பது இகழ்ச்சி

(ஏற்பது – பிறரிடம் சென்று யாசித்தல்; இகழ்ச்சி – இழிவு தரும்)

பிறரிடம் சென்று யாசித்தல் இழிவு தரும்.

9)   ஐயமிட்டு உண்

(ஐயமிட்டு – கேட்பவற்கு கொடுத்து)

கேட்பவற்கு கொடுத்து உண்ண வேண்டும்

10)  ஒப்புர வொழுகு

(ஒப்புர – உலக போக்கிற்கு எற்றவாறு; ஒழுகு – நட)

உலக போக்கிற்கு எற்றவாறு நடந்து கொள்ள வேண்டும்.

11) ஓதுவது ஒழியேல்

ஓதுவது- கற்பது ஒழியேல்- நிறுத்தாதே

நூல்களைக் கற்பதை நிறுத்தி விடாதே

12) ஓளவியம் பேசேல்

ஓளவியம்-பொறாமை மொழி

பொறாமை மொழிகளைப் பேசுதலை ஒழிப்பாயாக!!

13) அஃகஞ் சுருக்கேல்

அஃகு – தானியம் சுருக்கேல்- சுருக்காதே

நெல் முதலிய தானியங்களைக் குறைவாக விற்காதே!!

13 thoughts on “ஆத்திச்சூடி – Aathichudi – உயிர் வருக்கம்”

  1. Ithagaiya pokisathin mathipai ariya muyarchikaatha tamilargalin adaiyaalaamaaga varungaalam yethai kaanbikka pogirathu ?

Leave a reply to mohan Cancel reply